/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கடலாடி அரசு மேல்நிலை பள்ளியில் ஆசிரியர்களை நியமிக்க கோரிக்கை
/
கடலாடி அரசு மேல்நிலை பள்ளியில் ஆசிரியர்களை நியமிக்க கோரிக்கை
கடலாடி அரசு மேல்நிலை பள்ளியில் ஆசிரியர்களை நியமிக்க கோரிக்கை
கடலாடி அரசு மேல்நிலை பள்ளியில் ஆசிரியர்களை நியமிக்க கோரிக்கை
ADDED : ஏப் 14, 2025 05:16 AM
கடலாடி: கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 6 முதல் 12 வகுப்புகள் உள்ளது. இங்கு கலைப்பிரிவு எனப்படும் பொருளியல், வணிகவியலுக்கு நிரந்தர ஆசிரியர் பணியிடம் இல்லாத நிலை தொடர்கிறது.
கடலாடி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு இரண்டு ஆசிரியர் பணியிடங்கள் ஒதுக்கீடு செய்வதற்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அரசாணை பெறப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்களின் நலன் கருதி இரண்டு பாடப்பிரிவுகளுக்கும் ஆசிரியர்கள் முறையாக நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்தனர். பெற்றோர்கள் கூறியதாவது: இங்கு பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு முடித்து அருகே உள்ள கடலாடி அரசு கலை அறிவியல் கல்லுாரியில் சேருவதற்கு ஆரம்பத்திலேயே பொருளியல், வணிகவியலுக்கான பாட ஆசிரியர்கள் அவசியத் தேவையாக உள்ளனர்.
எனவே முதன்மை கல்வி அலுவலர் மாணவர்களின் நலன் கருதி பணியிடங்களை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் சுற்றுவட்டார கிராம மக்களுக்கு பயனுள்ளதாக அமையும். கல்லுாரியில் சேர்க்கை விகிதம் அதிகரிக்கும். இதற்கான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என்றனர்.

