sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பொய்யாமொழி அம்மன் கோயில் ரோட்டை சீரமைக்க கோரிக்கை

/

பொய்யாமொழி அம்மன் கோயில் ரோட்டை சீரமைக்க கோரிக்கை

பொய்யாமொழி அம்மன் கோயில் ரோட்டை சீரமைக்க கோரிக்கை

பொய்யாமொழி அம்மன் கோயில் ரோட்டை சீரமைக்க கோரிக்கை


ADDED : ஜன 27, 2025 06:43 AM

Google News

ADDED : ஜன 27, 2025 06:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே வாணியக்குடி பொய்யாமொழி அம்மன் கோயிலுக்கு செல்லும் ரோட்டை சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர்.

ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து இளையான்குடி செல்லும் ரோட்டில், காட்டு பரமக்குடி விலக்கிலிருந்து வாணியக்குடி செல்வதற்கு ரோடு வசதி உள்ளது. இந்த ரோட்டில், பொய்யாமொழி அம்மன் கோயில் அமைந்துள்ளதால், தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ரோடு பல ஆண்டாக சீரமைக்கப்படாததன் காரணமாக, ரோட்டில் ஜல்லி கற்கள் பெயர்ந்து, ரோடு குண்டும், குழியுமாக உள்ளது.

இதனால் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் சிரமப்படுகின்றனர்.

இந்த ரோடு ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை என இரு மாவட்டங்களை உள்ளடக்கி வருவதன் காரணமாக, பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாத நிலை உள்ளதாக அப்பகுதியினர் புகார் தெரிவித்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கோயிலுக்கு செல்லும் ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us