/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கடலாடியில் ரூ.7.50 கோடி மதிப்பீட்டில் புதிய ஐ.டி.ஐ., கட்டடம் திறப்பு விழா தார்சாலை அமைக்க கோரிக்கை
/
கடலாடியில் ரூ.7.50 கோடி மதிப்பீட்டில் புதிய ஐ.டி.ஐ., கட்டடம் திறப்பு விழா தார்சாலை அமைக்க கோரிக்கை
கடலாடியில் ரூ.7.50 கோடி மதிப்பீட்டில் புதிய ஐ.டி.ஐ., கட்டடம் திறப்பு விழா தார்சாலை அமைக்க கோரிக்கை
கடலாடியில் ரூ.7.50 கோடி மதிப்பீட்டில் புதிய ஐ.டி.ஐ., கட்டடம் திறப்பு விழா தார்சாலை அமைக்க கோரிக்கை
ADDED : ஆக 26, 2025 03:29 AM
கடலாடி: கடலாடியில் ரூ.7.50 கோடியில் புதிய ஐ.டி.ஐ., கட்டடம் திறப்பு விழா நடந்தது.
கடலாடியில் 2023 முதல் அரசு மேல்நிலைப்பள்ளி கட்டட வளாகத்தில் ஐ.டி.ஐ., இயங்கி வந்தது. இந் நிலையில் மாணவர் களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய ஐ.டி.ஐ., கட்டடம் தேவை என கடலாடி வர்த்தகர்கள் சங்கம் மற்றும் பல்வேறு சமூக நல அமைப்புகள் சார்பில் கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில் கடலாடியில் இருந்து எம்.கரிசல்குளம் செல்லும் சாலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 7.50 கோடி திட்ட மதிப்பீட்டில் துவங்கப்பட்ட புதிய கட்டடப் பணிகள் நிறைவு பெற்றன.
அரசு ஐ.டி.ஐ.,க்கான புதிய கட்டட திறப்பு விழா நேற்று காலை 11:30 மணிக்கு நடந்தது.
சென்னையில் இருந்து முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலமாக புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். கடலாடியில் உள்ள ஐ.டி.ஐ., கட்டடத்தை கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் குத்துவிளக்கேற்றி மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கி கல்லுாரியின் உட்கட்டமைப்புகளை பார்வையிட்டார்.
அதனை தொடர்ந்து உத்தரகோசமங்கையில் நடப்பாண்டிற்கு புதிதாக துவங்கப்பட்டுள்ள ஐ.டி.ஐ., கட்டடத்தையும் பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்.
உத்தரகோசமங்கையில் நடந்த விழாவிற்கு எம்.எல்.ஏ., காதர் பாட்ஷா, உதவி இயக்குனர் சிவசுப்பிரமணியன், ஐ.டி.ஐ., முதல்வர்கள் ஜவகர் பாண்டியன், நாகரத்தினம், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் குருதிவேல்மாறன் உட்பட பலர் பங்கேற்றனர்.
கடலாடியில் இருந்து அரசு ஐ.டி.ஐ., செல்லும் சாலை பல ஆண்டுகளாக சேதமடைந்துள்ளதால் புதிய தார் ரோடு அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.