ADDED : மார் 02, 2024 04:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : திருவாடானை அருகே அஞ்சுகோட்டை கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார்.
இவரது பசுமாடு மேய்ச்சலுக்கு சென்ற போது கழிப்பறை கட்டுவதற்காக வெட்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்தது. திருவாடானை தீயணைப்புதுறை நிலைய அலுவலர் வீரபாண்டியன் தலைமையிலான வீரர்கள் மாட்டை கயிற்றில் கட்டி உயிருடன் மீட்டனர்.

