ADDED : மார் 18, 2024 06:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : திருவாடானை அருகே அரசூர் கிராமத்தை சேர்ந்தவர் இளையராஜா. இவருக்கு சொந்தமான பசுமாடு மேய்ச்சலுக்கு சென்ற போது ரோட்டோரத்தில் இருந்த கழிப்பறை தொட்டிக்குள் தவறி விழுந்தது.
திருவாடானை தீயணைப்புநிலைய அலுவலர் வீரபாண்டியன் தலைமையில் சென்ற வீரர்கள் சென்று மாட்டை கயிற்றால் கட்டி உயிருடன் மீட்டனர்.

