sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

துண்டு பிரசுரங்கள், சுவரொட்டிகள்  அச்சிட்டு வழங்க கட்டுப்பாடு

/

துண்டு பிரசுரங்கள், சுவரொட்டிகள்  அச்சிட்டு வழங்க கட்டுப்பாடு

துண்டு பிரசுரங்கள், சுவரொட்டிகள்  அச்சிட்டு வழங்க கட்டுப்பாடு

துண்டு பிரசுரங்கள், சுவரொட்டிகள்  அச்சிட்டு வழங்க கட்டுப்பாடு


ADDED : மார் 17, 2024 12:35 AM

Google News

ADDED : மார் 17, 2024 12:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் துண்டுபிரசுரங்கள், சுவரொட்டிகள் அச்சிடவும், ஒட்டுவதற்கு கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என கலெக்டர் விஷ்ணுசந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.

கலெக்டர் கூறியுள்ளதாவது:

தேர்தல் துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகள் போன்றவற்றை அச்சிடுதல்மற்றும் வெளியிடுதல், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 இன் பிரிவு 127ஏ இன் விதிகளின்படி நிர்வகிக்கப்படுகிறது.

அச்சிடுபவர் மற்றும் வெளியீட்டாளரின் பெயர்கள் மற்றும் முகவரிகள் இல்லாத தேர்தல் துண்டுப்பிரசுரம் அல்லது சுவரொட்டி எதையும் எந்த ஒரு நபரும் அச்சிடவோ, வெளியிடவோ கூடாது.

வெளியீட்டாளரின் அடையாளம் குறித்த அறிவிப்பு அவரால் கையொப்பமிடப்பட்டு, அவரை தனிப்பட்ட முறையில் அறியப்பட்ட இரண்டு நபர்களால் சான்றளிக்கப்பட்டு அச்சுப்பொறிக்கு வழங்கப்படாவிட்டால் எந்த ஒரு நபரும் அச்சிடவோ அல்லது வெளியிடவோ கூடாது.

எந்தவொரு ஆவணமும் அச்சிடப்பட்ட 3 நாட்களுக்குள் அச்சிடப்பட்ட பொருளின் நகல்களை, வெளியீட்டாளரின்அறிவிப்புடன் மாவட்ட தேர்தல் அலுவலருக்குஅனுப்பி வைக்க வேண்டும்.

அச்சிட நிர்ணயித்த விலை பற்றிய தகவல்களையும், தேர்தல் ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் அளிக்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us