sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 லாரியில் தார் பாய் மூடாமல் செல்வதால் விபத்து அபாயம்

/

 லாரியில் தார் பாய் மூடாமல் செல்வதால் விபத்து அபாயம்

 லாரியில் தார் பாய் மூடாமல் செல்வதால் விபத்து அபாயம்

 லாரியில் தார் பாய் மூடாமல் செல்வதால் விபத்து அபாயம்


ADDED : டிச 14, 2025 06:28 AM

Google News

ADDED : டிச 14, 2025 06:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுகுளத்துார்: முதுகுளத்துார், கமுதி பகுதியில் எம்.சாண்ட், சவடு மண் ஏற்றிச் செல்லும் லாரியில் சிலர் தார்ப்பாய் போட்டு மூடாமல் செல்வதால் துாசி பறந்து பின்னால் வரும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.

அருப்புக்கோட்டை, கமுதி, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் எம்.சாண்ட், சவடுமண் குவாரி செயல்பட்டு வருகிறது. தினந்தோறும் 100க்கும் மேற்பட்ட லாரிகளில் ஏற்றப்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கட்டுமானப் பணிகளுக்காகவும் ரோடு பணிகளுக்காகவும் செல்கிறது.

இந்நிலையில் சிலர் மண் ஏற்றிச் செல்லும் லாரிகள் தார்ப்பாய் போட்டு மூடாமல் வருகின்றனர்.

லாரியின் மட்டத்திற்கு மேல் உயரமாக மண் ஏற்றி வரப்படுகிறது. இதனால் காற்று வீசும் போது லாரியில் இருந்து துாசி பின்னால் வரும் வாகனங்கள் மீதும் ரோட்டிலும் சிதறி விழுகின்றனர்.

இதனால் டூவீலரில் செல்லும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்திற்குள்ளாகும் அபாயம் உள்ளது. இதனால் ஏதாவது அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பு போலீசார் லாரிகளில் தார்ப்பாய் போட்டு மூடி எடுத்து செல்ல வலியுறுத்த வேண்டுமென்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.






      Dinamalar
      Follow us