நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்:  ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து பெரிய கண்மாய் பாலம், செங்குடி, பூலாங்குடி வழியாக இளையான்குடி செல்லும் ரோட்டில் 50க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயனடைகின்றனர். இங்கு செங்குடி கண்மாய் கரையோர ரோட்டுப் பகுதியில் சீமைக்கருவேலம் ஆக்கிரமித்துள்ளதால் அவ்வழியாக டூவீலரில் செல்வோர் சிரமப்படுகின்றனர்.
எதிரில் வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

