ADDED : அக் 07, 2024 10:54 PM

அ நிறம் | அளவு
திருவாடானை : திருவாடானையில் இருந்து ஓரியூர் செல்லும் ரோட்டில் அருளானந்தர் சர்ச் அருகே பள்ளம் உள்ளது. மழை நீரில் மண் அரிப்பு ஏற்பட்டு பள்ளம் உள்ளது. ரோட்டோரம் ஒதுங்கும் டூவீலர்களில் செல்பவர்கள் பள்ளத்தில் சறுக்கி விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
இரவில் விளக்கு வெளிச்சம் இல்லாததால் பாதசாரிகள், டூவீலர் ஓட்டுநர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பள்ளத்தை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
