/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் கோயிலில் ரூ.1 கோடி மோசடி வழக்கு; விசாரணை டிச.13க்கு தள்ளிவைப்பு
/
ராமேஸ்வரம் கோயிலில் ரூ.1 கோடி மோசடி வழக்கு; விசாரணை டிச.13க்கு தள்ளிவைப்பு
ராமேஸ்வரம் கோயிலில் ரூ.1 கோடி மோசடி வழக்கு; விசாரணை டிச.13க்கு தள்ளிவைப்பு
ராமேஸ்வரம் கோயிலில் ரூ.1 கோடி மோசடி வழக்கு; விசாரணை டிச.13க்கு தள்ளிவைப்பு
ADDED : நவ 12, 2024 11:29 PM

ராமநாதபுரம்; ராமேஸ்வரம் கோயிலில் ஊழியர்கள் சேமநல நிதியில் ரூ.1 கோடி மோசடி செய்த வழக்கு விசாரணை டிச.13 தள்ளி வைக்கப்பட்டது.
இக்கோயில் ஊழியர்கள் சேமநல நிதி கணக்கில் செலுத்த வேண்டிய பணத்தை கோயில் தற்காலிக கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் சிவனருள் குமரன், கணக்கர் ரவீந்திரன் ஆகியோர் மோசடி செய்ததாக ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை 2020ல் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்கின்றனர். ராமநாதபுரம் கரூர் வைஸ்யா வங்கியில் கோயில் பெயரில் நன்கொடைக்காக அனுமதியின்றி கணக்கு துவங்கி மோசடி செய்ததும், அதற்கு கோயில் முன்னாள் இணை ஆணையர் செல்வராஜ் கையெழுத்திட்டதும் தெரிய வந்தது.
சிவனருள் குமரன் கோயில் பணத்தை தனது தந்தை கோபால் வங்கி கணக்கிற்கு பண பரிமாற்றம் செய்துள்ளார். இதையடுத்து போலீசார் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் சிவனருள் குமரன், அவரது தந்தை கோபால், கணக்கர் ரவீந்திரன், முன்னாள் இணை ஆணையர் செல்வராஜ் ஆகிய 4 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு நேற்று ராமநாதபுரம் 2வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ரவீந்திரன், செல்வராஜ் ஆஜராகினர். சிவனருள் குமரன், தந்தை கோபால் வரவில்லை. இதையடுத்து பொறுப்பு மாஜிஸ்திரேட் வெர்ஜின் வெஸ்டா , வழக்கை டிச.13 க்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

