sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.2.10 கோடி கஞ்சா பறிமுதல்: மாமா, மருமகன் கைது

/

இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.2.10 கோடி கஞ்சா பறிமுதல்: மாமா, மருமகன் கைது

இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.2.10 கோடி கஞ்சா பறிமுதல்: மாமா, மருமகன் கைது

இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.2.10 கோடி கஞ்சா பறிமுதல்: மாமா, மருமகன் கைது


ADDED : ஜூன் 22, 2025 09:13 PM

Google News

ADDED : ஜூன் 22, 2025 09:13 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை:ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே முள்ளிமுனை கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.1 கோடி மதிப்புள்ள கஞ்சா, புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் ரூ.1.10 கோடி கஞ்சாவை மரைன் போலீசார் பறிமுதல் செய்து மாமா, மருமகனை கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதி இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் அதிகளவில் கடத்தப்படுகிறது. மூன்று நாட்களுக்கு முன் தேவிபட்டினம் மற்றும் தொண்டி மரைன் போலீசாருக்கு தொண்டி அருகே முள்ளிமுனை, காரங்காடு கடற்கரையில் இருந்து கஞ்சா கடத்துவதாக தகவல் கிடைத்தது. மரைன் எஸ்.ஐ.க்கள் அய்யனார், கதிரவன், நுண்ணறிவு பிரிவு ஏட்டு இளையராஜா மற்றும் போலீசார் அப்பகுதியில் மூன்று நாட்களாக கண்காணித்தனர்.

நேற்று முன்தினம் இரவு 11:30 மணிக்கு சரக்கு வேன் ஒன்று முள்ளிமுனை கடற்கரை ஓரமாக வந்து நின்றது. அவர்கள் வேனை மடக்கி சோதனையிட்ட போது அதில் 45 பார்சல்களில் ரூ.1 கோடி மதிப்புள்ள 90 கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது. போலீசாரை பார்த்ததும் வேனில் இருந்தவர்கள் தப்பி ஓடினர். போலீசார் விரட்டி சென்று அதன் டிரைவர் புதுக்கோட்டை மாவட்டம் காரக்கோட்டை மணமேல்குடியை சேர்ந்த ராஜமாணிக்கத்தை 61, கைது செய்தனர்.

கஞ்சாவை பறிமுதல் செய்து தப்பிய மற்றவர்களை தேடி வருகின்றனர். இவற்றை படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயற்சி செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

* இதனிடையே ராஜமாணிக்கம் சொந்த ஊரான மணமேல்குடி போலீசாருக்கு கஞ்சா பறிமுதல் குறித்து தெரிவிக்கப்பட்டது. மரைன் எஸ்.ஐ., ராமராஜன் தலைமையிலான போலீசார் பானாவயலில் உள்ள ராஜமாணிக்கம் மருமகன் ஆனந்தராஜ் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது 42 பார்சல்களில் இலங்கைக்கு கடத்த பதுக்கப்பட்ட ரூ.1 கோடியே 10 லட்சம் மதிப்புள்ள 100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பார்சல்களை பிரித்து பார்த்த போது கஞ்சா சேதமடைந்திருந்தது. போலீசார் ஆனந்தராஜை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us