/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரூ.8 லட்சம் கடல் அட்டை பறிமுதல்
/
ரூ.8 லட்சம் கடல் அட்டை பறிமுதல்
ADDED : ஆக 27, 2025 02:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.8 லட்சம் மதிப்புள்ள கடல் அட்டையை மரைன் போலீசார் பறிமுதல் செய்தனர்.
ராமேஸ்வரம், மண்டபம் கடல் பகுதியில் கடல் அட்டையை பிடித்து மறைவான இடத்தில் பதப்படுத்தி இலங்கைக்கு கடத்துகின்றனர்.
நேற்று காலை மண்டபம் வடக்கு கடற்கரையில் மரைன் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது கடற்கரையில் மறைத்து வைத்திருந்த இரு மூடையை கைப்பற்றி சோதனையிட்டதில் காய்ந்த நிலையில் 80 கிலோ கடல் அட்டை இருந்தது.
இதனை கள்ளத்தனமாக படகில் இலங்கைக்கு கடத்திச் செல்ல இருந்தனர். இதன் மதிப்பு ரூ. 8 லட்சம். கடத்தல்காரர்களை போலீசார் தேடுகின்றனர்.