sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.80 லட்சம் கஞ்சா பறிமுதல்: தொண்டியில் இருவர் கைது

/

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.80 லட்சம் கஞ்சா பறிமுதல்: தொண்டியில் இருவர் கைது

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.80 லட்சம் கஞ்சா பறிமுதல்: தொண்டியில் இருவர் கைது

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.80 லட்சம் கஞ்சா பறிமுதல்: தொண்டியில் இருவர் கைது


ADDED : ஜூலை 06, 2025 02:40 AM

Google News

ADDED : ஜூலை 06, 2025 02:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை:ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே தீர்த்தாண்டதானம் கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த ரூ. 80 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதி இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் அதிகமாக கடத்தப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு எஸ்.பி.பட்டினம் அருகே தீர்த்தாண்டதானம் கடற்கரையில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்ற போது சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரித்தனர்.

முன்னுக்கு பின் முரணாக பேசியதால் போலீசுக்கு தெரிவித்தனர். எஸ்.பி.பட்டினம் எஸ்.ஐ., ரமேஷ் மற்றும் போலீசார் விசாரித்தனர்.

அவர்கள் வைத்திருந்த சாக்கு மூடையில் இருந்து ரூ.80 லட்சம் மதிப்புள்ள 78 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் மீமசல் தெற்கு தெருவை சேர்ந்த மாது 31, தொண்டி அருகே புதுக்குடியை சேர்ந்த சமயக்கண்ணு 24, ஆகிய இருவரையும் கைது செய்தனர். இலங்கைக்கு கஞ்சா கடத்த , படகை எதிர்பார்த்து காத்திருந்ததாக தெரிவித்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய டூவீலர் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடிய மேலும் நான்கு பேரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us