/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆர்.எஸ்.மங்கலம் பொதுப்பணித்துறை ஆய்வுமாளிகையை சீரமைக்க வலியுறுத்தல்
/
ஆர்.எஸ்.மங்கலம் பொதுப்பணித்துறை ஆய்வுமாளிகையை சீரமைக்க வலியுறுத்தல்
ஆர்.எஸ்.மங்கலம் பொதுப்பணித்துறை ஆய்வுமாளிகையை சீரமைக்க வலியுறுத்தல்
ஆர்.எஸ்.மங்கலம் பொதுப்பணித்துறை ஆய்வுமாளிகையை சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : செப் 20, 2025 11:38 PM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை கட்டடத்தை சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தினர்.
ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா அலுவலகம் முன்பு பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை கட்டடம், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் அலுவலகம் உள்ளிட்டவைகள் அமைந்துள்ளன. இந்த ஆய்வு மாளிகை பங்களாவில் குறிப்பிட்ட கட்டணம் வாடகையாக செலுத்தி அரசியல் கட்சியினர், முக்கிய பிரமுகர்கள், விவசாய குழுக்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் கூட்டங்கள் நடத்துவது, தங்குவது உள்ளிட்ட தேவைகளுக்கு பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர்.
குறைந்த கட்டணம் என்பதால் பெரும்பாலும் இந்த ஆய்வு மாளிகை கட்டடம் மற்றும் வளாகத்தையே விவசாயிகளும், முக்கிய பிரமுகர்களும் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் ஆய்வு மாளிகை கட்டடம் கடந்த சில ஆண்டுகளாக முறையாக சீரமைப்பு செய்யப்படாததால் கட்டடத்தின் பெரும்பாலான பகுதிகள் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளன. இதனால் ஆய்வு மாளிகையை பயன்படுத்துவதற்கு பொதுமக்கள் அச்சமடைகின்றனர்.
இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. மேலும் வளாகத்தில் செயல்பட்டு வரும் பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் அலுவலக கட்டடமும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளதால் பொதுப்பணித்துறை ஊழியர்கள் ஆபத்தான கட்டடத்தில் அச்சத்துடன் பணியாற்றும் சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு மாளிகை மற்றும் பொதுப்பணித்துறை கட்டடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.