
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாத அமாவாசைக்கு மறுநாள் ஒவ்வொரு ஆண்டும் சம்பக சஷ்டி விழா நடக்கிறது.
இவ்வாண்டு விழாவில் தினமும் பைரவருக்கு அபிஷேகம், பல்வேறு வகையான அலங்காரங்கள் தீபாராதனை நடக்கிறது.
இரு நாட்களாக வெள்ளை மற்றும் பச்சை சாத்திய அலங்காரத்தில் வெள்ளி சூலம் ஏந்தி பைரவர் அருள்பாவித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சக்தி குமரன் செந்தில் கோயிலில் சம்பக சஷ்டி விழா நடக்கிறது.
நவ., 26 அனைத்து சிவன் மற்றும் முருகன் கோயிலில் அருள்பாலிக்கும் பைரவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடக்க உள்ளது.

