sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

இரையைத்தேடி  வயல்வெளியில் குவியும் சரணாலயப் பறவைகள் 

/

இரையைத்தேடி  வயல்வெளியில் குவியும் சரணாலயப் பறவைகள் 

இரையைத்தேடி  வயல்வெளியில் குவியும் சரணாலயப் பறவைகள் 

இரையைத்தேடி  வயல்வெளியில் குவியும் சரணாலயப் பறவைகள் 


ADDED : நவ 09, 2025 06:03 AM

Google News

ADDED : நவ 09, 2025 06:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் நெல் சாகுபடி பணிகள் துவங்கியுள்ளதால் வயல் வெளியில் புழு, பூச்சிகளை உண்பதற்காக பறவைகள் வருவது அதிகரித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்த்தங்கல், மேலச் செல்வனுார், சித்திரங்குடி, காஞ்சிரங்குடி, சக்கரகோட்டைஆகிய இடங்களில் பறவைகள் சரணாலயங்கள் உள்ளன. இவ்விடங்களுக்கு ஆண்டு தோறும் ஏராளமான வெளிநாட்டு பறவைகள் இனப்பெருக்கம் செய்வதற்காக வருகின்றன.

குறிப்பாக கூழைக்கடா, செங்கால் நாரை, கரண்டிவாயன், மஞ்சள் மூக்கு நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன் இனப்பெருக்கம் செய்வதற்காக அக்.,ல் வந்து மார்ச் வரை தங்கி அதன் பின் இடம் பெயர்கின்றன. இவ்வாண்டு ராமநாதபுரம், பரமக்குடியில் மழை பெய்துள்ளதால் சரணாலயங்களுக்கு பறவைகள் வந்துள்ளன.

தற்போது நெல் சாகுபடி பணி காரணமாக வயல் வெளிகள், ஓடைகளில் புழு, பூச்சிகளை உண்பதற்காக பறவைகள் குவிகின்றன. இவற்றை அவ்வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் அலைபேசியில் படம் எடுத்து மகிழ் கின்றனர்.






      Dinamalar
      Follow us