sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

இரை தேடி கண்மாய், வயலில் குவியும் சரணாலய பறவைகள்

/

இரை தேடி கண்மாய், வயலில் குவியும் சரணாலய பறவைகள்

இரை தேடி கண்மாய், வயலில் குவியும் சரணாலய பறவைகள்

இரை தேடி கண்மாய், வயலில் குவியும் சரணாலய பறவைகள்


ADDED : செப் 21, 2024 05:26 AM

Google News

ADDED : செப் 21, 2024 05:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் இவ்வாண்டு போதிய மழை இல்லாததால் தேர்தங்கல் பறவைகள்சரணாலயத்திற்கு சீசன் நேரத்தில் பறவைகள் வரத்து குறைந்தாலும் தற்போதுள்ள பறவைகள்இரைக்காக வயல்வெளிகள், கண்மாய்களுக்கு வருவது அதிகரித்துஉள்ளது.

மாவட்டத்தில் தேர்தங்கல், மேலச் செல்வனுார், சித்திரங்குடி, காஞ்சிரங்குடி ஆகிய இடங்களில் பறவைகள் சரணாலயங்கள் உள்ளன. இங்கு ஆண்டு தோறும் ஏராளமான வெளிநாட்டு பறவைகள் இனப்பெருக்கம் செய்வதற்காக வருகின்றன.

குறிப்பாக கூழைக்கடா, செங்கால் நாரை, கரண்டிவாயன், மஞ்சள் மூக்கு நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன் ஆகிய பறவைகள் இனப்பெருக்கம் செய்வதற்காக அக்.,ல் வந்து மார்ச் வரை தங்கி அதன் பின் இடம் பெயர்கின்றன. இவ்வாண்டு ராமநாதபுரம், பரமக்குடி பகுதியில் போதிய மழை பெய்யவில்லை.

இதன் காரணமாக தேர்தங்கல் பறவைகள் சரணாலயத்தில் தண்ணீர் குறைந்துள்ளது. வெளியூர் பறவைகள் வரத்து குறைந்த போதும் தற்போதுள்ள நாரை, கொக்கு போன்ற பறவைகள் காவனுார், புத்தேந்தல், ராமநாதபுரம் பெரிய கண்மாய், சக்கரகோட்டை கண்மாய்களில் வயல்வெளி, ஓடைகளில் இரை தேடி குவிகின்றன.






      Dinamalar
      Follow us