sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

'மினி பார்' ஆன சாயல்குடி -- தரைக்குடி ரோடு போதை ஆசாமிகளால் அச்சத்தில் மக்கள்

/

'மினி பார்' ஆன சாயல்குடி -- தரைக்குடி ரோடு போதை ஆசாமிகளால் அச்சத்தில் மக்கள்

'மினி பார்' ஆன சாயல்குடி -- தரைக்குடி ரோடு போதை ஆசாமிகளால் அச்சத்தில் மக்கள்

'மினி பார்' ஆன சாயல்குடி -- தரைக்குடி ரோடு போதை ஆசாமிகளால் அச்சத்தில் மக்கள்


ADDED : அக் 09, 2025 04:15 AM

Google News

ADDED : அக் 09, 2025 04:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாயல்குடி : சாயல்குடி -- தரைக்குடி செல்லும் சாலையில் டாஸ்மாக் கடைகள் உள்ளன. சாலையின் இரு புறங்களிலும் வயல்வெளிகள், பனை மரக்காடுகள் உள்ளிட்ட இடங்களில் மது அருந்தும் போதை ஆசாமிகளால் மாணவிகள், பெண்கள் அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

சாயல்குடியில் இருந்து தரைக்குடி சாலையில் உள்ள மதுபான கடையில் பாட்டில்களை வாங்கிக் கொண்டு குடிமகன்கள் பனைமரக்காடுகளிலும் சாலையோர சிறு பாலங்களிலும் நீர்நிலை அதிகம் உள்ள இடங்களிலும் மொத்தமாக அமர்ந்து கொண்டு உ.பா., அருந்துகின்றனர்.

இந்நிலையில் சாலை ஓரமாக செல்லக்கூடிய பொதுமக்கள் மற்றும் மாலை வேளைகளில் டியூசன் முடிந்து செல்லக்கூடிய மாணவிகள் அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

குடித்து முடித்த பாட்டில்களை திறந்த வெளியில் உடைத்துச் செல்வதால் மற்றும் வயல்வெளிகளில் போட்டு செல்வதால் விவசாய காலங்களில் அவை விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கால்களை குத்தி பதம் பார்க்கின்றன.

எனவே சாயல்குடி போலீசார் பொதுமக் களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் சாலை ஓரங்களில் அமர்ந்து குடிக்கும் குடிமகன்களிடம் உரிய வழிகாட்டுதலை வழங்க வேண்டும் என்றனர்.






      Dinamalar
      Follow us