/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் குரங்குகளால் அச்சம்
/
ராமநாதபுரத்தில் குரங்குகளால் அச்சம்
ADDED : அக் 18, 2024 05:05 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகரில் குடியிருப்பு பகுதியில் குரங்குகள் சுற்றித்திரிவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். அவற்றை பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமநாதபுரம் வனப்பகுதிகளில் போதிய உணவு, தண்ணீர் கிடைக்காமல் கலெக்டர் அலுவலக வளாகம், பட்டணம் காத்தான், நகரில் குரங்குகள் திரிகின்றன. இவை தென்னைமரங்களில் ஏற்றி காய்களை பறித்து சேதப்படுத்துகின்றன.
நேற்று தினமலர் நகர், மதுரை ரோடு ஆகிய பகுதிகளில் இருகுரங்குகள் வீடுகளில் காம்பவுண்ட் சுவர், தென்னைமரங்களில் தாவி குதித்தன. இவை வீட்டிற்குள் வந்துவிடுமோ என பெண்கள், சிறுவர்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே ராமநாதபுரம் குடியிருப்பு பகுதிகளில் திரியும் குரங்குகளை பிடித்து காட்டுப்பகுதியில் விட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.