/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை முடிவு
/
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை முடிவு
ADDED : டிச 28, 2025 05:19 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை வழங்கக்கோரி மனு செய்துள்ள, மனுதாரர்களுக்கு வயது தளர்வு, உதவித்தொகை வழங்குவதற்கான குழுக்கூட்டம் நடந்தது.
கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். மருத்துவக்குழுவினர் மூலம் கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், மனவளர்ச்சி குன்றியோர், காது கேளாதோர், கண் பார்வையற்றோரை பரிசோதனை செய்தனர்.
இக்குழுவானது 74 பேருக்கு வருவாய்த்துறை மூலம் உதவித்தொகை பெறுவதற்கு பரிந்துரை செய்தது.
இக்கூட்டத்தில் மாவட்ட சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் கிருஷ்ணகுமாரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர் சந்திரன், டாக்டர்கள்பெரோஸ்கான், அருண்ராஜ், காயத்ரி, தீபிகா ஆகியோர் பங்கேற்றனர்.

