/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரத்தில் கடல் சீற்றம் மீனவர் குடிசை சேதம்
/
ராமேஸ்வரத்தில் கடல் சீற்றம் மீனவர் குடிசை சேதம்
ADDED : நவ 18, 2025 06:57 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் தொடர்ந்து வீசிய சூறாவளியால் கடல் சீற்றம் ஏற்பட்டு மீனவர் குடிசை சேதமடைந்தது. மீனவர்கள் வேலையின்றி வீடுகளில் முடங்கினர்.
வங்கக் கடலில் உருவான சூறாவளியால் நவ., 14 முதல் ராமேஸ்வரம், பாம்பன் பகுதியில் ஒரு மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் சூறாவளி வீசியது. இதனால் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுந்ததால், நவ., 14 முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன் துறையினர் தடை விதித்தனர்.
4ம் நாளான நேற்றும் சூறாவளி வீசியதால் ராமேஸ்வரம் கடலில் சீற்றம் ஏற்பட்டு மிதமான மழை பெய்தது. இதனால் ராமேஸ்வரம் சேராங்கோட்டை கடற்கரையில் கடல் அரிப்பு ஏற்பட்டு, அங்குள்ள மீனவர் குடிசை வீடு சேதமடைந்தது. ராமேஸ்வரத்தில் 1500 விசைப்படகுகள், நாட்டுப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டு மீனவர்கள் வேலையின்றி வீடுகளில் முடங்கினர்.

