/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மனைவிக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம்
/
மனைவிக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம்
ADDED : பிப் 22, 2024 11:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி : மனைவிக்கு தெரியாமல்இரண்டாவது திருமணம் செய்த கணவர் உட்பட 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
திருவாடானையை சேர்ந்தவர் நாகவேல். இவரது மனைவி சரண்யா 33. இருவருக்கும் 2006ல் திருமணமாகி இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நாகவேல் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து காரைக்குடியில் குடும்பம் நடத்துவது தெரிந்தது.
இது குறித்து சரண்யா திருவாடானை மகளிர் போலீசில் புகார் செய்தார்.நாகவேல் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த ஏழு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.