/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கமுதி கல்லுாரிக்கு இரண்டாவது பரிசு
/
கமுதி கல்லுாரிக்கு இரண்டாவது பரிசு
ADDED : ஜன 09, 2026 05:28 AM

கமுதி: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் தமிழ்த்துறை சார்பில் திருப்பாவை மற்றும் திருவெம்பாவை திருவிழா நடந்தது.
இதில் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து 15க்கும் மேற்பட்ட கல்லுாரியில் இருந்து 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் நடனம், நாடகம், ஓவியம், வினாடி வினா, கோலம், பாடல் ஒப்புவித்தல் உள்ளிட்ட போட்டிகள் தனித்தனியாக நடந்தது. இதில் கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவு கல்லுாரியிலிருந்து 13 மாணவர்கள் கலந்து கொண்டு தனித்தனியாக நடைபெற்ற போட்டியில் பரிசுகளை பெற்றனர்.
முடிவில் அனைத்து போட்டிகளிலும் பரிசு பெற்ற கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவு கல்லுாரி மாணவர்கள் இரண்டாம் இடம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்கள், ஒருங்கிணைப்பாளர் தமிழ்த்துறை உதவி பேராசிரியர் மணிமேகலையை கல்லுாரி முதல்வர் தர்மர் மற்றும் பேராசிரியர்கள்,மாணவர்கள் பாராட்டினர்.

