sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மழை பெய்யாததால் வீணாகும் விதைகள்

/

மழை பெய்யாததால் வீணாகும் விதைகள்

மழை பெய்யாததால் வீணாகும் விதைகள்

மழை பெய்யாததால் வீணாகும் விதைகள்


ADDED : செப் 29, 2025 04:47 AM

Google News

ADDED : செப் 29, 2025 04:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை : மழையின்றி வயலில் விதைகள் முளைப்பு தன்மையை இழந்து வருவதால் திருவாடானை தாலுகாவில் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியமாக திகழும் திருவாடானை தாலுகாவில் 26 ஆயிரத்து 650 எக்டேரில் நெல் சாகுபடி பணிகள் துவங்கியுள்ளது.

உழவு பணிகள் முடிந்து விதைத்துள்ளனர். மழை பெய்யாததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

இது குறித்து செங்கமடை விவசாயி சுந்தரபாண்டியன் கூறியதாவது- கடந்தாண்டு விதைக்கும் போது போதிய மழை இன்றி நெல் விதைகள் பாதிக்கபட்டது.

அதனை தொடர்ந்து மீண்டும் விதைத்தோம். இந்தாண்டு விதைத்து 10 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. மழை பெய்யாமல் விதைகள் முளைக்கவில்லை. மழை பெய்ய வேண்டிய நேரத்தில் வெயில் வாட்டி வதைக்கிறது. காற்றும் பலமாக வீசுகிறது.

இன்னும் ஓரிரு நாட்களில் மழை பெய்யவில்லை என்றால் விதைகள் முளைப்பு தன்மையை இழந்துவிடும்.

மீண்டும் விதை நெல் வாங்கி விதைப்பதால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் என்றார்.






      Dinamalar
      Follow us