நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டுதல் பயிற்சி கருத்தரங்கம் நடந்தது.
ராமநாதபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மையம் மற்றும் பள்ளி நிர்வாகம் சார்பில் நடந்த கருத்தரங்கில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மதுக்குமார் தலைமை வகித்து ஆலோசனை வழங்கினார். ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் கோகிலா, நிர்வாக ஆலோசகர் ஜேக்கப், பள்ளி முதல்வர் பிரீத்தா ஆகியோர் செய்திருந்தனர்.

