ADDED : செப் 19, 2026 07:23 PM
அ நிறம் | அளவு
கமுதி: கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லுாரி தாவரவியல் ஆராய்ச்சித்துறை சார்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடந்தது. பேராசிரியர் ஜெயகாளை தலைமை வகித்தார். பேராசிரியர்கள் அப்துல் காதர், உத்திர செல்வம், வரதராஜன், முன்னாள் மாணவர்கள் சங்க செயலாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்தனர்.
பேராசிரியர் மேரிசுஜின் வரவேற்றார். கல்லூரி மாணவர்கள் தாவரவியல் ஆராய்ச்சி குறித்து எடுத்துரைத்தனர். நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
