sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மன்னார் வளைகுடா கடலில் கழிவுநீர் கலப்பு அரிய வகை உயிரினங்களுக்கு ஆபத்து

/

மன்னார் வளைகுடா கடலில் கழிவுநீர் கலப்பு அரிய வகை உயிரினங்களுக்கு ஆபத்து

மன்னார் வளைகுடா கடலில் கழிவுநீர் கலப்பு அரிய வகை உயிரினங்களுக்கு ஆபத்து

மன்னார் வளைகுடா கடலில் கழிவுநீர் கலப்பு அரிய வகை உயிரினங்களுக்கு ஆபத்து


ADDED : டிச 30, 2024 01:08 AM

Google News

ADDED : டிச 30, 2024 01:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மன்னார் வளைகுடா கடலில் பல ஆண்டுகளாக கலக்கும் கழிவு நீரால் தொடர் மாசு ஏற்பட்டு அப்பகுதியில் வாழும் மீன்கள், ஆமைகள் போன்ற அரிய வகை உயினங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

கீழக்கரை நகராட்சியில் 1 முதல் 21 வார்டுகள் உள்ளன. இங்கு 65 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர்.

வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் நேரடியாக மன்னார் வளைகுடா கடலில் பல இடங்களில் பல ஆண்டுகளாக விடப்படுகிறது.

1990 ஆண்டுகளுக்கு முன் கீழக்கரை மன்னார் வளைகுடா கடலோரப்பகுதிகளில் முத்து குளித்தலும், அரிய வகை சங்கு சேகரித்தல் உள்ளிட்ட பல வகையான கடல் தொழில் நடந்தது.

கழிவு நீரின் தாக்கத்தால் இத்தொழில் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மீன்கள், ஆமைகள் போன்ற அரிய வகை உயிரினங்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.

இதுகுறித்து மீனவர்கள் கூறியதாவது: கீழக்கரை கடற்கரையில் இருந்து 7 முதல் 10 நாட்டிக்கல் மைல் தொலைவில் தீவுகள் வரிசையாக அமைந்துள்ளன.

கழிவுநீர் கலப்பால் கடல் நீர் தொடர்ந்து மாசுபடுகிறது.

மீன்களின் வளமும் குன்றிப் போய் உள்ளது. மீன்வளம் கிடைக்காததால் தீவுகளை தாண்டி ஆழ்கடலில் சென்று மீன் பிடிக்க வேண்டி உள்ளது. எனவே கழிவுநீர் கடலில் விடுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

அமைச்சர் கூறியும் நடவடிக்கை இல்லை


2022ல் கீழக்கரைக்கு வந்த அப்போதைய பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கழிவுநீர் கலக்கும் இடத்தில் விவரம் தெரியாமல் கடலில் குளித்தார்.

பிறகு இந்த விவரம் தெரிந்து கடல் நீரை துாய்மையாக வைத்திருக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

நகராட்சித் தலைவர் செகானாஸ் ஆபிதா கூறுகையில், ''நகரில் எட்டு இடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்குரிய நிதி ஒதுக்கப்பட்டு விரைவில் பணிகள் துவங்க உள்ளது. இனி கடலில் கழிவுநீர் கலப்பது தடுக்கப்படும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us