ADDED : ஜூலை 16, 2025 11:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே மேலப்பண்ணைகுளம்கிராமத்தில் சித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் முடிந்து 48 நாள் கழித்து மண்டலபூஜை விழா நடந்தது.
மங்கள இசை, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது. சித்தி விநாயகருக்கு மஞ்சள், சந்தனம், விபூதி உட்பட பொருட்களால் அபிஷேகம் தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.
முதுகுளத்துார் சுற்றியுள்ள பகுதியில் இருந்து கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மேலப்பண்ணைகுளம் கிராமமக்கள் செய்தனர்.