ADDED : ஜூலை 16, 2025 11:25 PM

முதுகுளத்துார்: முதுகுளத்துார் குறுவட்டார அளவிலான செஸ்போட்டி முதுகுளத்துார் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
தாசில்தார் கோகுல்நாத் தலைமை வகித்தார். பேரூராட்சி தலைவர் ஷாஜகான், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வசந்தி, வட்டார கல்வி அலுவலர் முருகேஸ்வரி முன்னிலை வகித்தனர். உடற்கல்வி ஆசிரியர் கமால்பாட்ஷா வரவேற்றார். அப்போது முதுகுளத்துார் வட்டாரத்திற்கு உட்பட்ட 30க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 11, 14, 17, 19 வயது பிரிவின் அடிப்படையில் போட்டி நடந்தது.
இதில் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி மாவட்ட போட்டிக்கு தகுதி பெற்றனர்.
போட்டி நடுவர்களாக ஆரோக்கியராஜ், முகமதுஉசேன், வடிவேல் முருகன், கோகிலா, அன்சாரி உட்பட பலர் இருந்தனர்.
பெரிய பள்ளிவாசல் தலைவர் காதர் முகைதீன், தாளாளர் ஜஹாங்கீர், கல்விகுழு தலைவர் காஜா நஜிமுதீன், தலைமை ஆசிரியர் காஜா நிஜாமுதீன் குரைசி உட்பட ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர். உதவி தலைமைஆசிரியர் காமிலா பானு நன்றி கூறினார்.