ADDED : செப் 13, 2025 11:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை:திருவாடானை நீதி மன்றத்தில் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் லோக் அதாலத் நேற்று நடந்தது.
நீதிபதி ஆன்டனி ரிஷந்தேவ் தலைமை வகித்தார். இரு தரப்பிலும் ஏற்றுக் கொள்ளும் விதமான சமரசம் எற்படுத்தக் கூடிய சிவில் வழக்குகள், குடும்ப நல வழக்குகள், வாகன விபத்து இழப்பீடு, சிறு குற்றங்கள், செக் மோசடி, வங்கி வராக் கடன், நிலமோசடி, குடிபோதையில் வாககனம் ஓட்டிய வழக்குகள் குறித்து விசாரிக்கப்பட்டன.
மொத்தம் 265 வழக்கு கள் விசாரிக்கப்பட்டு 180 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. வராக் கடன் மற்றும் அபராதம் உட்பட ரூ. 1 கோடியே 6 லட்சத்து 825 இழப்பீடு சமரசம் செய்யப்பட்டதாக வட்ட சட்ட பணிகள் குழுவினர் தெரிவித்தனர்.