sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 முதுகுளத்துார் அருகே மண் சரிவை கட்டுப்படுத்த ஈட்டி கற்றாழை செடி

/

 முதுகுளத்துார் அருகே மண் சரிவை கட்டுப்படுத்த ஈட்டி கற்றாழை செடி

 முதுகுளத்துார் அருகே மண் சரிவை கட்டுப்படுத்த ஈட்டி கற்றாழை செடி

 முதுகுளத்துார் அருகே மண் சரிவை கட்டுப்படுத்த ஈட்டி கற்றாழை செடி


ADDED : டிச 31, 2025 05:26 AM

Google News

ADDED : டிச 31, 2025 05:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே செல்வநாயகபுரம் கிராமத்தில் சாலையோரத்தில் உள்ள விவசாய நிலத்தில் ஏற்படும் மண் சரிவை கட்டுப்படுத்த ஈட்டி கற்றாழை செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

முதுகுளத்துார் அருகே செல்வநாயகபுரம் கிராமத்தில் 700க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். கிராமத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. கிராமத்தில் இருந்து கண்மாய்க்கரை வழியாக அபிராமம் செல்லும் ரோடு மற்றும் கடம்பன்குளம் கிராமத்திற்கு செல்லும் ரோடு பகுதிகளில் நெல் பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.

ரோட்டை விட தாழ்வாக விவசாய நிலங்கள் இருப்பதால் அடிக்கடி மண் சரிவு ஏற்பட்டு விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டு வந்தது. இதனால் விவசாயத்தில் செலவு செய்த பணத்தை கூட எடுக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். விவசாயிகள் கூறியதாவது: கண்மாய்க்கரை ஓரத்தில் உள்ள நிலங்களில் ஈட்டி கற்றாழை செடிகள் வளர்க்கப்பட்டு வருகிறது. செடி அடர்ந்து புதர்போல் வளர்வதால் மழை பெய்தாலும் மண் அரிப்பு ஏற்படுவதில்லை.

இதனால் ஏராளமான இடங்களில் ஈட்டி கற்றாழை செடி நட்டு வைத்து பாதுகாத்து வருகின்றோம். விவசாயிகள் நிலத்தில் ஏற்படும் மண் சரிவை கட்டுப்படுத்த ஈட்டி கற்றாழை செடி வளர்க்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us