sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

தேவர் குருபூஜையில் விதிமீறல் நடவடிக்கை எடுக்க தனிப்படை

/

தேவர் குருபூஜையில் விதிமீறல் நடவடிக்கை எடுக்க தனிப்படை

தேவர் குருபூஜையில் விதிமீறல் நடவடிக்கை எடுக்க தனிப்படை

தேவர் குருபூஜையில் விதிமீறல் நடவடிக்கை எடுக்க தனிப்படை


ADDED : அக் 19, 2024 11:22 PM

Google News

ADDED : அக் 19, 2024 11:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கமுதி: -பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜைக்கு விதிகளை மீறி டூவீலரில் வருபவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என கமுதி டி.எஸ்.பி., இளஞ்செழியன் கூறினார்.

தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு கமுதியில் கிராமதலைவர்கள், சமுதாய அமைப்பினர், மறவர் இன அறக்கட்டளை நிர்வாகிகள், அன்னதானம் வழங்கும் சமுதாய அமைப்புகள் சேர்ந்த நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இதில், டி.எஸ்.பி., இளஞ்செழியன் கூறியதாவது: அக்., 30ல் தேவர் ஜெயந்தி, குருபூஜை, அரசு விழாக்களில் போலீஸ் அறிவிப்புகளை மீறி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி அச்சுறுத்தும் வகையில் டூவீலரில் வருபவர்களை பிடித்து வழக்குபதிந்து வாகனங்களை பறிமுதல் செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

கிராமங்களில் இருந்து பசும்பொன்னுக்கு பொதுமக்கள் வந்து செல்லும் வகையில் 117 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. கமுதி குண்டாறு வழியாக புதிதாக அமைக்கப்பட்டு வரும் புறவழிச்சாலை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும்.

கிளாமரம், முஷ்டக்குறிச்சி, பேரையூர், அபிராமம் பகுதிகளில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு வாகனங்கள் முழுமையாக சோதனை செய்த பிறகு அனுப்பி வைக்கப்படும் என்றார். உடன் சமுதாய தலைவர்கள், மக்கள், போலீசார் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us