sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு  கோயில்களில் சிறப்பு பூஜைகள் 

/

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு  கோயில்களில் சிறப்பு பூஜைகள் 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு  கோயில்களில் சிறப்பு பூஜைகள் 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு  கோயில்களில் சிறப்பு பூஜைகள் 


ADDED : ஜன 15, 2024 11:16 PM

Google News

ADDED : ஜன 15, 2024 11:16 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை, அலங்காரம் தீபாராதனை நடந்தது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயில்களில் உள்ளசுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார தீபாராதனை நடந்தது. வெட்டுடையாள் காளியம்மன் கோயில், மல்லம்மாள் காளியம்மன் கோயில், சொக்கநாதர் கோயில், புதுபஸ் ஸ்டாண்ட் விநாயகர் கோயில்.

தேவிபட்டினம் ரோட்டில் உள்ள ருத்ரமாதேவி கோயில், கலெக்டர் அலுவலகம் அருகே வினை தீர்க்கும்வேலவர் கோயில், குமரய்யா கோயில் உள்ளிட்ட பல்வேறுகோயில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமிதரிசனம் செய்தனர்.

பரமக்குடி: பரமக்குடியில் உள்ள அனைத்து கோயில்களிலும் மக்கள் தரிசனம் செய்து பொங்கல் விழாவை கொண்டாடினர்.மேலும் புத்தாடை உடுத்தி மகிழ்ச்சி அடைந்தனர்.

கதிரவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஒவ்வொரு வீடுகளிலும் புதுப் பானையில் பொங்கலிட்டு புத்தாடை உடுத்தி மகிழ்ந்தனர். மேலும் சூரியன் தன் வட திசை பயணத்தை தொடங்கும் நாளாக தை முதல் நாள் உள்ளது.

*பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் அதிகாலை 5:00 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை பாடல்கள் பாடப்பட்டு மகாதீபாராதனை நடந்தது. தொடர்ந்து நாள் முழுவதும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

* எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அதிகாலை 5:30 மணிக்கு திருப்பாவை பாடல்கள் பாடப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மார்கழி மாதத்தில் ஆண்டாள் தன் சன்னதியில் இருந்து பெருமாளிடம் சேர்க்கை ஆகி இருந்தார். நேற்று மாலை 6:00 மணிக்கு மேள, தாளம் முழங்க தனிச் சன்னிதியை அடைந்தார்.

*மேலும் அனுமார் கோதண்டராமசாமி கோயில், முத்தாலம்மன், மீனாட்சி சுந்தரேஸ்வரர், ஈஸ்வரன் உள்ளிட்ட அனைத்து கோயில்களும் பக்தர்கள் தரிசனம் செய்து பொங்கல் விழாவை கொண்டாடினர்.






      Dinamalar
      Follow us