ADDED : டிச 19, 2024 04:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரெகுநாதபுரம்: திருப்புல்லாணி வட்டார அளவில் நேரு யுவகேந்திரா நடத்திய கைப்பந்து போட்டி மற்றும் கயிறு இழுத்தல் போட்டிகள் நடந்தது.
காரான் ஊராட்சி துணைத் தலைவர் கோபி ராஜா தலைமை வகித்தார். ஹிந்து முன்னணி ஒன்றிய தலைவர் கிஷோர் முன்னிலை வகித்தார்.
கைப்பந்து போட்டியில் முதல் பரிசை சபரி சாஸ்தா இளைஞர் குழுவும், இரண்டாம் பரிசை தாமரைக்குளம் தாமரை இளைஞர் நற்பணி மன்றமும் வென்றது. ஏற்பாடுகளை நேருயுவ கேந்திரா தன்னார்வலர் முனீஸ்குமார், வினோதினி, பானுப்பிரியா செய்திருந்தனர்.