sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ராமேஸ்வரம் மீனவர்களுக்கு இலங்கை கோர்ட் அபராதம்

/

ராமேஸ்வரம் மீனவர்களுக்கு இலங்கை கோர்ட் அபராதம்

ராமேஸ்வரம் மீனவர்களுக்கு இலங்கை கோர்ட் அபராதம்

ராமேஸ்வரம் மீனவர்களுக்கு இலங்கை கோர்ட் அபராதம்


ADDED : பிப் 11, 2025 05:26 AM

Google News

ADDED : பிப் 11, 2025 05:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேருக்கு, 7 லட்சம் ரூபாய் அபராதம், படகின் டிரைவருக்கு 2 கோடி ரூபாய் அபராதம் விதித்து மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ராமேஸ்வரத்தில் இருந்து ஜன., 25ல் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் சச்சின் என்பவரது விசைப்படகை இலங்கை கடற்படை வீரர்கள் சிறைபிடித்து, படகில் இருந்த 15 மீனவர்களை யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.

வாய்தா நாளான நேற்று அவர்களை கிளிநொச்சி நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். இதில், 14 மீனவர்களுக்கு தலா, 50,000 ரூபாய் வீதம் 7 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்திய ரூபாய் மதிப்பில் அது, 2.03 லட்சம் ரூபாய்.

மேலும் அந்த படகின் டிரைவர் ஜெயபால், 56, என்பவருக்கு 2 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அது, இந்திய ரூபாய் மதிப்பில் 58 லட்சம் ரூபாய். மத்திய, மாநில அரசுகள் அபராதத்தை செலுத்தி மீனவர்களை விடுவிக்க வேண்டும் என ராமேஸ்வரம் மீனவர்கள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us