sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மீனவர்களை எச்சரித்து விடுவித்த இலங்கை கடற்படை

/

மீனவர்களை எச்சரித்து விடுவித்த இலங்கை கடற்படை

மீனவர்களை எச்சரித்து விடுவித்த இலங்கை கடற்படை

மீனவர்களை எச்சரித்து விடுவித்த இலங்கை கடற்படை


ADDED : மார் 24, 2025 12:54 AM

Google News

ADDED : மார் 24, 2025 12:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம் : நடுக்கடலில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை வீரர்கள் சிறைப்பிடித்து 30 நிமிடங்களுக்கு பின் விடுவித்தனர்.

மார்ச் 22ல் ராமேஸ்வரத்தில் இருந்து 420 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் வழக்கம் போல் இந்திய, இலங்கை எல்லை பகுதியில் மீன்பிடித்தனர். அங்கு இரண்டு கப்பல்களில் ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள் துப்பாக்கியை காட்டி எச்சரித்து மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். பீதியடைந்த மீனவர்கள் கடலில் வீசிய வலைகளை வேகமாக படகில் இழுத்து வைத்துக்கொண்டு படகுகளுடன் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள்.

அப்போது ஒரு விசைப்படகை இலங்கை கடற்படை வீரர்கள் மடக்கி பிடித்தனர். படகில் இருந்த 7 மீனவர்களிடம் அவர்கள் விசாரித்தனர். அவர்களிடம் மீனவர்கள்,'இனிமேல்தான் மீன்பிடிக்க போகிறோம். தற்போது படகில் மீன்கள் இல்லை,' என்றனர். இதனையடுத்து மீனவர்களை ராமேஸ்வரம் திரும்பி செல்லும்படி இலங்கை கடற்படை வீரர்கள் எச்சரித்து அனுப்பினர். இதையடுத்து மீனவர்கள், இந்திய எல்லைக்குள் மீன்பிடித்து விட்டு நேற்று காலை ராமேஸ்வரம் கரை திரும்பினார்கள். இதுகுறித்து மீன்வளத்துறையினரிடம் மீனவர்கள் புகார் தெரிவிக்கவில்லை.






      Dinamalar
      Follow us