sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

எட்டு நாட்களுக்குப் பின் 4 லட்சத்தீவு மீனவர்களை இலங்கை மீட்டது

/

எட்டு நாட்களுக்குப் பின் 4 லட்சத்தீவு மீனவர்களை இலங்கை மீட்டது

எட்டு நாட்களுக்குப் பின் 4 லட்சத்தீவு மீனவர்களை இலங்கை மீட்டது

எட்டு நாட்களுக்குப் பின் 4 லட்சத்தீவு மீனவர்களை இலங்கை மீட்டது


ADDED : ஜூலை 08, 2025 04:48 AM

Google News

ADDED : ஜூலை 08, 2025 04:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்:எட்டு நாட்களாக நடுக்கடலில் உணவின்றி தவித்த லட்சத்தீவு மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் மீட்டனர்.

ஜூன் 28ல் மாலத்தீவு அருகே மினிகாய் தீவில் இருந்து விசைப்படகில் 4 மீனவர்கள் அரபிக் கடலில் மீன்பிடிக்க சென்றனர். மீன்பிடித்து விட்டு மறுநாள் கரை திரும்ப வேண்டும். மீனவர்கள் திரும்பாததால் பதட்டம் அடைந்த உறவினர்கள் இந்திய கடற்படையினரிடம் புகார் தெரிவித்தனர்.

இந்திய கடற்படை அதிகாரிகள் மீனவர்களை மீட்கும்படி இலங்கை கடற்படையை வலியுறுத்தினர். சர்வதேச கடல் எல்லையில் இருநாட்டு கடற்படையும் தேடிய நிலையில் நேற்று முன்தினம் (ஜூலை 6) இலங்கை எல்லைக்குள் புகுந்த ஒரு படகை அந்நாட்டு கடற்படையினர் பிடித்து விசாரித்ததில் மினிகாய் தீவு மீனவர்கள் என தெரிந்தது.

படகில் இயந்திர கோளாறால் காற்றின் வேகத்தில் திசை மாறி இலங்கைக்குள் புகுந்ததாகவும், 8 நாட்களாக உணவின்றி குடிநீரை பருகியதாக மீனவர்கள் தெரிவித்தனர். பின் மீனவர்களுக்கு உணவு, குடிநீர் வழங்கிய இலங்கை வீரர்கள் கொழும்புக்கு அழைத்து சென்று முகாமில் தங்க வைத்தனர்.






      Dinamalar
      Follow us