sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

திருப்புல்லாணி பெருமாள் கோயிலில் ஸ்ரீரங்கம் ஜீயர் மங்களாசாசனம்

/

திருப்புல்லாணி பெருமாள் கோயிலில் ஸ்ரீரங்கம் ஜீயர் மங்களாசாசனம்

திருப்புல்லாணி பெருமாள் கோயிலில் ஸ்ரீரங்கம் ஜீயர் மங்களாசாசனம்

திருப்புல்லாணி பெருமாள் கோயிலில் ஸ்ரீரங்கம் ஜீயர் மங்களாசாசனம்


ADDED : ஜூலை 11, 2025 02:10 AM

Google News

ADDED : ஜூலை 11, 2025 02:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புல்லாணி:ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி பெருமாள் கோயிலில் ஸ்ரீரங்கம் ஜீயர் மங்களாசாசனம் செய்தார்.

ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரமத்தின் ஜீயர் வராக மஹா தேசிகன் சுவாமிகள் ஜூலை 5 மாலை ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் வந்தார்.

நேற்று (ஆனி பவுர்ணமி) முதல் ஆவணி பவுர்ணமி வரை 60 நாட்கள் ஹிந்து மத துறவியர்கள் அனைவரும் ஒரே ஊரில் தங்கி இருந்து உலக நன்மைக்காக சாதுர்மாஸ்ய விரதம் இருப்பது வழக்கம். அதன்படி திருப்புல்லாணியில் உள்ள ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரம மடத்தில் நேற்று காலை ஜீயரின் சாதுர் மாஸ்ய விரதம் துவங்கியது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வைணவ கோயில்களில் இருந்து வந்திருந்த பட்டாச்சாரியார்கள் தாம்பூலத்தட்டில் மாலை, வஸ்திரம், கனிகள் உள்ளிட்டவைகளை ஜீயரிடம் சமர்ப்பித்து ஆசீர்வாதம் பெற்றனர்.

காலையில் ஸ்ரீ பாதுகா சகஸ்ரம் பாராயணம் நடந்தது. 11:00 மணிக்கு பஞ்ச சாந்தி ஜெபம் மற்றும் புத்தக வெளியீடு உள்ளிட்டவைகள் நடந்தன. பல்வேறு வைணவ அறிஞர்களின் மூலம் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. தொடர்ந்து வராக மகா தேசிகன் ஜீயரின் ஆசியுரை நிகழ்த்தப்பட்டது.

மாலை 5:00 மணிக்கு ஆதி ஜெகநாதப்பெருமாள், பத்மாஸனி தாயார், பட்டாபிஷேக ராமர், ராமானுஜர், மணவாள மாமுனிகள் உள்ளிட்ட சன்னதிகளின் முன் சென்று மங்களாசாசனம் என்னும் நிகழ்ச்சி நடந்தது. ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பட்டாச்சாரியார்கள், ஆசிரம சீடர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us