ADDED : ஜூன் 17, 2025 05:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: பரமக்குடி நகர் காட்டுப்பரமக்குடி புனித பதுவை அந்தோணியார் தேர் பவனி விழா நடந்தது.
புனித பதுவை அந்தோணியார் சர்ச்சில் ஜூன் 10 கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. சிவகங்கை ம.மிக்கேல்பட்டணம் பாதிரியார் ஜேம்ஸ் ஆரோக்கியசாமி திருப்பலியை நடத்தினார். தினமும் மாலை 6:00 மணிக்கு நவநாள் திருப்பலியும், புனிதரின் திரு உருவம் தாங்கிய பவனி நடந்தது.
நேற்று முன்தினம் இரவு தேர்ப்பவனி விழாவில் இடைக்காட்டூர் பாதிரியார்கள் ஜான் வசந்த் குமார், பரமக்குடி இருதயராஜ் உட்பட பாதிரியார்கள், இறை மக்கள் பங்கேற்றனர்.