ADDED : ஜன 14, 2025 08:02 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி:
பரமக்குடியில் எஸ்.டி.பி.ஐ., ராமநாதபுரம் மேற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் நுாருல் அமீன் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் அகமது நவ்வி, மாநில செயலாளர் நஜ்மா பேகம் பேசினர்.
புதிய நிர்வாகிகளாக மாவட்ட தலைவர் நுாருல் அமீன், நிர்வாக பொதுச் செயலாளர் பாஞ்சு பீர், துணைத் தலைவர் மீரான் முகைதீன் தேர்வு செய்யப்பட்டனர். கல்வி வளாகங்களில் மாணவியர் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். மாவட்டத்தில் தொழில் வளத்தை அதிகப்படுத்த வேண்டும். மருத்துவமனைகளில் டாக்டர்கள் பற்றாக்குறையை போக்க தீர்மானிக்கப்பட்டது.