ADDED : அக் 27, 2025 11:52 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்: வங்கக்கடலில் உருவாகியுள்ள மோந்தா புயல் கரை நோக்கி நகர்வதால் நேற்று காலை ராமேஸ்வரம் அருகே பாம்பன் துறைமுகம் அலுவலகத்தில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
இதன் மூலம் புயல் கரைக்கு நெருங்கி வருவதாகவும், மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும், பாம்பன் கடற்கரையில் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைக்க மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. கடந்த இரு நாட்களாக ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதியில் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது.

