/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காரங்காட்டில் பலத்த காற்று படகு போக்குவரத்து நிறுத்தம்
/
காரங்காட்டில் பலத்த காற்று படகு போக்குவரத்து நிறுத்தம்
காரங்காட்டில் பலத்த காற்று படகு போக்குவரத்து நிறுத்தம்
காரங்காட்டில் பலத்த காற்று படகு போக்குவரத்து நிறுத்தம்
ADDED : மே 29, 2025 11:11 PM
திருவாடானை: காரங்காட்டில் பலத்த காற்று வீசுவதால் சுற்றுலா படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
தொண்டி அருகே காரங்காடு கடற்கரை சதுப்பு நிலக்காடுகளை உள்ளடக்கி அமைந்துள்ளது. அனைவருடைய மனதை கவரும் வகையில் மாங்குரோவ் காடுகள் அடர்த்தியாக உள்ளன. இப்பகுதி சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்டதால் வெளி மாவட்டங்களிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
சுற்றுலாப் பயணிகளை அழைத்து கடலுக்குள் சென்று சுற்றி காட்டுவதற்காக வனத்துறை சார்பில் படகு சவாரி, கயாக்கிங் எனப்படும் துடுப்பு படகு சவாரி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோடை விடுமுறை துவங்கியுள்ளதால் பயணிகள் வருகை அதிகரித்தது. பாதுகாப்பு உடையணிந்து படகில் உற்சாகமாக சென்றனர்.
இந்நிலையில் இப்பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த காற்று வீசுகிறது. இதனால் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், பலத்த காற்று வீசுவதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி மே 26 முதல் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்நிலை நீடிக்கும் என்றனர்.