sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

காரங்காட்டில் பலத்த காற்று  படகு போக்குவரத்து நிறுத்தம்

/

காரங்காட்டில் பலத்த காற்று  படகு போக்குவரத்து நிறுத்தம்

காரங்காட்டில் பலத்த காற்று  படகு போக்குவரத்து நிறுத்தம்

காரங்காட்டில் பலத்த காற்று  படகு போக்குவரத்து நிறுத்தம்


ADDED : மே 29, 2025 11:11 PM

Google News

ADDED : மே 29, 2025 11:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: காரங்காட்டில் பலத்த காற்று வீசுவதால் சுற்றுலா படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

தொண்டி அருகே காரங்காடு கடற்கரை சதுப்பு நிலக்காடுகளை உள்ளடக்கி அமைந்துள்ளது. அனைவருடைய மனதை கவரும் வகையில் மாங்குரோவ் காடுகள் அடர்த்தியாக உள்ளன. இப்பகுதி சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்டதால் வெளி மாவட்டங்களிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.

சுற்றுலாப் பயணிகளை அழைத்து கடலுக்குள் சென்று சுற்றி காட்டுவதற்காக வனத்துறை சார்பில் படகு சவாரி, கயாக்கிங் எனப்படும் துடுப்பு படகு சவாரி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோடை விடுமுறை துவங்கியுள்ளதால் பயணிகள் வருகை அதிகரித்தது. பாதுகாப்பு உடையணிந்து படகில் உற்சாகமாக சென்றனர்.

இந்நிலையில் இப்பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த காற்று வீசுகிறது. இதனால் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், பலத்த காற்று வீசுவதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி மே 26 முதல் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்நிலை நீடிக்கும் என்றனர்.






      Dinamalar
      Follow us