/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசு சமூக நீதி விடுதியில் மாணவர் மீது சரமாரி தாக்கு
/
அரசு சமூக நீதி விடுதியில் மாணவர் மீது சரமாரி தாக்கு
அரசு சமூக நீதி விடுதியில் மாணவர் மீது சரமாரி தாக்கு
அரசு சமூக நீதி விடுதியில் மாணவர் மீது சரமாரி தாக்கு
ADDED : நவ 17, 2025 01:48 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு சமூகநீதி மாணவர் விடுதியில் தங்கியிருந்த மாணவரை, சக மாணவர்கள் தாக்கும் வீடியோ பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராமநாதபுரம் அம்மா பூங்கா அருகே சேதுபதி நகரில், மாணவர்களுக்கான அரசு சமூகநீதி விடுதி உள்ளது.
இங்கு, 60 மாணவர்கள் தங்கி, பல்வேறு பள்ளிகளில் படிக்கின்றனர். விடுதி அறையில், ஏழாம் வகுப்பு மாணவரை, சக மாணவர்கள் தாக்கி, அதை வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.
இந்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. நவ., 10ல் மாணவர்களிடையே தகராறு நடந்துள்ளது.
இது தொடர்பாக கலெக்டர் சிம்ரன்ஜீத்சிங் காலோன் உத்தரவில், பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் இரு மாணவர்கள் தற்காலிகமாக பள்ளியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
வீடியோ தொடர்பாக விடுதி காப்பாளர் சண்முகராஜிடம், கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.

