sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ஆசிரியர்கள் பிரம்பால் தாக்கியதில் மாணவர் காயம்: பள்ளி முற்றுகை

/

ஆசிரியர்கள் பிரம்பால் தாக்கியதில் மாணவர் காயம்: பள்ளி முற்றுகை

ஆசிரியர்கள் பிரம்பால் தாக்கியதில் மாணவர் காயம்: பள்ளி முற்றுகை

ஆசிரியர்கள் பிரம்பால் தாக்கியதில் மாணவர் காயம்: பள்ளி முற்றுகை


ADDED : அக் 27, 2024 06:32 AM

Google News

ADDED : அக் 27, 2024 06:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே தனியார் பள்ளியில் ஆசிரியர்கள் பிரம்பால் தாக்கியதில் 9ம் வகுப்பு மாணவர் காயமடைந்தார். பெற்றோர், உறவினர்கள் நேற்று பள்ளியை முற்றுகையிட்டனர்.

தங்கச்சிமடத்தை சேர்ந்தவர் மீன் வியாபாரி பிராங்க்ளின். இவரது மகன் இங்குள்ள சந்தியா நகர் 'கிரைட்ஸ் தி கிங்' என்ற மெட்ரிக் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறார். பள்ளி கழிவறையில்

சில மாணவர்கள் தகாத வார்த்தைகளை எழுதி உள்ளனர். இதுகுறித்து முதல்வர் ஷாலினி, ஆசிரியர்கள் விசாரித்தனர்.

இந்நிலையில் அக்., 24ல் பள்ளி ஆசிரியர்கள் பிராங்க்ளின் மகனை பிரம்பால் தாக்கினர். இதில் மாணவரின் கை, முதுகில்காயம் ஏற்பட்டது. இதையடுத்து பெற்றோர் முதல்வரிடம் முறையிட சென்றனர்.

ஆனால் பள்ளி நிர்வாகம் முறையாக பதிலளிக்கவில்லை எனக்கூறி பிராங்க்ளின் நேற்று தங்கச்சிமடம் போலீசில் புகார் அளித்தார். தொடர்ந்து நேற்று மாலை உறவினர்களுடன் சென்று பள்ளியை முற்றுகையிட்டனர்.

ராமேஸ்வரம் டி.எஸ்.பி., உமாதேவி தலைமையில் போலீசார் சமரசம் செய்தும் பலனில்லை. இதனால் நேற்று இரவு வரை பெற்றோர், உறவினர்கள் பள்ளி வளாகத்தில் அமர்ந்திருந்தனர். இதுகுறித்து குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளும் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us