ADDED : ஏப் 03, 2026 06:32 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லுாரியில் இ.எல்.சி., அமைப்பு, ஓய்.ஆர்.சி சங்கம் இணைந்து தேர்தலில் நுாறு சதவீதம் ஓட்டளிப்போம் என்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. முதல்வர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் வேதியியல் துறை உதவிப்பேராசிரியர் செல்வக்குமார் வரவேற்றார். புல்லங்குகுடி வி.ஏ.ஓ., சிவக்குமார் இந்திய நாட்டின் அரசியல் அமைப்பு, ஓட்டளிப்பதின் அவசியம் குறித்து பேசினார். நுாறு சதவீதம் ஓட்டளிப்பு என்ற வடிவத்தில் மாணவர்கள் இணைந்து உறுதிமொழி எடுத்தனர்.
கல்லுாரித் தாளாளர் செல்லத்துரை அப்துல்லா, செய்யது அம்மாள் மெட்ரிக் பள்ளி தாளாளர் ராஜாத்தி அப்துல்லா, பேராசிரியர்கள் பங்கேற்றனர். நாட்டுநலப்பணிதிட்ட ஒருங்கிணைப்பாளர் வள்ளி விநாயகம் நன்றி கூறினார். ஏற்பாடுகளை நிர்வாக அலுவலர் சாகுல் அமீது, மேற்பார்வையாளர் சபியுல்லா செய்தனர்.
