ADDED : மே 15, 2025 04:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி: விபத்தில் மாணவரின் தந்தை இறந்ததால் கல்வி உதவித் தொகை மாணவருக்கு வழங்கப்பட்டது.அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் வருவாய் ஈட்டும் தாய், தந்தை விபத்தில் இறந்து விட்டால் பாதிக்கபடுகிற மாணவருக்கு கல்வி பராமரிப்பு செலவிற்காக ரூ.75 ஆயிரம் அரசால் வழங்கப்படுகிறது. தொண்டி அருகே நம்புதாளையை சேர்ந்த வசந்தகுமாரியின் 7 வயது மகன். இவர் அங்குள்ள அரசு தொடக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கிறார். ஓராண்டிற்கு முன்பு வசந்தகுமார் விபத்தில் இறந்தார். இவரது மகனுக்கு கல்வி பராமரிப்பு தொகை ரூ.75 ஆயிரம் வழங்கும் நிகழ்ச்சி திருவாடானை வட்டார கல்வி அலுவலகத்தில் நடந்தது.
வட்டார கல்வி அலுவலர்கள் புல்லாணி, ஆரோக்கியசாமி வழங்கினர். தலைமை ஆசிரியர் ஜான்தாமஸ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.