/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இளைஞர் தினத்தில் மாணவர்கள் ஊர்வலம்
/
இளைஞர் தினத்தில் மாணவர்கள் ஊர்வலம்
ADDED : ஜன 13, 2024 04:49 AM

ராமேஸ்வரம் : -தேசிய இளைஞர் தினத்தையொட்டி ராமேஸ்வரம் அரசுப் பள்ளி என்.சி.சி., மாணவர்கள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர்.
சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம் தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது. ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளி என்.சி.சி.,மாணவர்கள் நேற்று விழா கொண்டாடினர். அதன் மாணவர்களின் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயா கிறிஸ்டல் ஜாய் துவக்கி வைத்தார்.
என்.சி.சி., மாணவர்களின் ஊர்வலம் கோயில் நான்கு ரதவீதி வழியாக சென்று மீண்டும் பள்ளிக்கு திரும்பினர். ஊர்வலத்தில் என்.எஸ்.எஸ்., மாவட்ட தொடர்பு அலுவலர் ஜெயகாந்தன், இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, என்.சி.சி., ஆசிரியர் பழனிச்சாமி, ஆசிரியர்கள் தினகரன், வேலுச்சாமி, செல்வக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.