ADDED : நவ 07, 2025 11:12 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே இளஞ்செம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் சார்பில் பனை விதை நடும் நிகழ்ச்சி நடந்தது.
தலைமையாசிரியர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். இளஞ்செம்பூர், பூக்குளம் சுற்றியுள்ள பகுதிகளில் ஊருணி, கண்மாய் கரைகளில் 500க்கும் மேற்பட்ட பனை விதைகளை மாணவர்கள் நட்டனர். உடன் ஆசிரியர்கள், மாணவர்கள்,பொதுமக்கள் பங்கேற்றனர்.

