sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பஸ் படிக்கட்டில் மாணவர்கள் தொங்கியபடி பயணம்! விபத்திற்கு முன் கூடுதலாக பஸ்கள் இயக்க வேண்டும்

/

பஸ் படிக்கட்டில் மாணவர்கள் தொங்கியபடி பயணம்! விபத்திற்கு முன் கூடுதலாக பஸ்கள் இயக்க வேண்டும்

பஸ் படிக்கட்டில் மாணவர்கள் தொங்கியபடி பயணம்! விபத்திற்கு முன் கூடுதலாக பஸ்கள் இயக்க வேண்டும்

பஸ் படிக்கட்டில் மாணவர்கள் தொங்கியபடி பயணம்! விபத்திற்கு முன் கூடுதலாக பஸ்கள் இயக்க வேண்டும்


ADDED : ஜூலை 03, 2025 10:27 PM

Google News

ADDED : ஜூலை 03, 2025 10:27 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் பகுதியில் பள்ளி, கல்லுாரி, அலுவலகம் திறப்பு, முடியும் நேரத்தில் போதிய பஸ்கள் இல்லாததால் உயிருக்கு ஆபத்தான முறையில் மாணவர்கள் பஸ் படிகட்டுகளில் தொங்கியபடிபயணம் செய்வது வாடிக்கையாகியுள்ளது.

மாவட்ட தலைநகரான ராமநாதபுரத்திற்கு அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரிய மற்றும் கல்லுாரி, பள்ளிகளில் படிக்க தினந்தோறும் பல ஆயிரம் மக்கள், மாணவர்கள் வந்து செல்கின்றனர். இவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பஸ் போக்குவரத்து வசதி இல்லை.

இதன் காரணமாக பள்ளி, கல்லுாரி, அலுவலகம் திறப்பு, முடியும், காலை, மாலை நேரங்களில் பஸ்களில் கூட்ட நெரிசலில் சிக்கி முதியோர்கள், பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். குறிப்பாக ஆபத்தை உணராமல் மாணவர்கள் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்வது வாடிக்கையாகியுள்ளது.

கடந்த காலங்களில் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி சென்ற மாணவர்கள் பலியாகியும், காயமடைந்தும் உள்ளனர். இது தெரிந்தும்ராமநாதபுரத்தில் அதிகாரிகள் கண்டும் காணாதது போல உள்ளனர். இவ்விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் பள்ளி, கல்லுாரி மற்றும் அலுவலகங்கள் துவங்கும், முடியும் நேரங்களில் கூடுதலாக அரசு பஸ்கள் இயக்க வேண்டும்.

படிக்கட்டுகளில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மாணவர்களை கண்டித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும்.






      Dinamalar
      Follow us