sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

காதலால் வீட்டை விட்டு வெளியேறிய மாணவர்கள் ராமேஸ்வரத்தில் சிக்கினர்

/

காதலால் வீட்டை விட்டு வெளியேறிய மாணவர்கள் ராமேஸ்வரத்தில் சிக்கினர்

காதலால் வீட்டை விட்டு வெளியேறிய மாணவர்கள் ராமேஸ்வரத்தில் சிக்கினர்

காதலால் வீட்டை விட்டு வெளியேறிய மாணவர்கள் ராமேஸ்வரத்தில் சிக்கினர்


ADDED : மே 21, 2025 03:01 AM

Google News

ADDED : மே 21, 2025 03:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்:- காதலை பெற்றோர்கள் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய ஊட்டியைச் சேர்ந்த 17 வயது மாணவர், 15 வயது மாணவியை ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்டில் குழந்தைகள் பாதுகாப்பு தன்னார்வலர்கள் மீட்டனர்.

ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்டில் சந்தேகத்திற்கிடமான நிலையில் 15 வயது சிறுமி, 17 வயது சிறுவன் நின்று கொண்டிருந்தனர். அங்கிருந்த குழந்தைகள் பாதுகாப்பு அலகினை சேர்ந்த தன்னார்வலர்கள் இருவரிடமும் விசாரித்தனர். அவர்கள் ஊட்டியை சேர்ந்த 17 வயதுடைய பிளஸ் 2 மாணவரும், 15 வயதுடைய பத்தாம் வகுப்பு படித்த மாணவி எனத்தெரியவந்தது. இருவரும் காதலித்துள்ளனர். காதல் தெரியவந்ததால் பெற்றோர் கண்டித்தனர்.

இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற ஆசையில் ஊட்டியிலிருந்து பஸ்சில் ராமேஸ்வரத்திற்கு வருந்தது தெரியவந்தது. இருவரையும் ராமநாதபுரம் குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைத்தனர். அங்கு குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் இருவரின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இருவரையும் ஊட்டி குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவிடம் ஒப்படைத்து, இருவருக்கும் அறிவுரை கூறி பெற்றோர்களுடன் அனுப்பி வைத்தனர்.---------






      Dinamalar
      Follow us